Pages

Thursday, 6 August 2015

"ஆயிரம்"

" தத்துவம் நிறைந்த 
    தவப்புதல்வர்கள் ஆயிரம்!
    மகத்துவம் வாய்ந்த 
    மன்னர்கள் ஆயிரம்!
    இன்பம் தரும் 
    இன்னிசை ஆயிரம்!
    அன்பு அளிக்கும் 
    அருஞ்சொற்கள் ஆயிரம்!
    பன்மை வளர்த்த 
    பகுத்தறிவாளர்கள் ஆயிரம்!
    நன்மை வளர்த்த 
    நல்லறிஞர்கள் ஆயிரம்!
    அழகை வெளிகாட்டிய 
    அற்புதங்கள் ஆயிரம்!
    திசைகள் முழங்கும் 
    திறமைசாலிகள் ஆயிரம்! 
    இசைகள் வழங்கும் 
    இலக்கியங்கள் ஆயிரம்!
    உயிர்  காத்த 
    உள்ளங்கள் ஆயிரம்!
    பயிரை காத்த 
    பள்ளங்கள் ஆயிரம்!
    பேரறிவு கொண்ட 
    பேச்சாளர்கள் ஆயிரம்!
    அறிவு நிறைந்த 
     அறிஞர்கள் ஆயிரம்!
    மதி பெற்ற 
    மங்கையர்கள் ஆயிரம்!
    வித்தை நிறைந்த 
    விடுகதைகள் ஆயிரம்!
    கலை சார்ந்த 
    கடல்கள் ஆயிரம்!
    மலையாக குவிந்த 
    மடல்கள் ஆயிரம்!
    சிலைகளை வடிவமைத்த  
    சிற்பிகள் ஆயிரம்!
    தவறில்லா 
    தவிப்புகள் ஆயிரம்!
    துளை இதயத்தின் 
    துடிப்புகள் ஆயிரம்!
    மறை கொண்ட 
    மனிதர்கள் ஆயிரம்!
    சிறை கண்ட 
    சிந்தனையாளர்கள் ஆயிரம்!
    எளிதில் எழுகின்ற 
    எண்ணங்கள் ஆயிரம்!
    விரைவாக விளைகின்ற 
    விதைகள் ஆயிரம்!
    முகம் வெளிபடுத்திய 
    முகவரிகள் ஆயிரம்!
    சிரம் நிமிர்ந்த 
    சிகரங்கள் ஆயிரம்!
    தடை தகர்த்து 
    நடை போட்டவர்கள் ஆயிரம்!
    தொடுவானம் சொன்ன 
    தொடர்கள் ஆயிரம்!
    பூலோகத்து நன் 
    பூக்கள் ஆயிரம்!
    புலவர்கள் படைத்த 
    புலமைகள் ஆயிரம்!
    வரிகள் உரைத்த 
    வல்லமைகள் ஆயிரம்!
    வாகை சூடிய 
    வாரணங்கள் ஆயிரம்!
    வழியில் கண்ட 
    வலிகள் ஆயிரம்!
    விழியில் கண்ட 
    வலிமைகள் ஆயிரம்!
    மனம் வீசும் 
    மலர்கள் ஆயிரம்!
    பலம் சேர்க்கும் 
    படைகள் ஆயிரம்!
    விண்ணில்  விளைந்த 
    விண்மீன்கள் ஆயிரம்!
    என் உள்ளம் கனிந்த 
    நல்வாழ்த்துகள் ஆயிரம்!" 
      --பா.நதி@ நரேந்திரன் 

No comments:

Post a Comment