"அரவணைக்கும் அன்பிற்கும்- என்
அன்னையின் பாசத்திற்கும்
அளவு கிடையாது!
இடிக்கின்ற இடிக்கும்-இறங்கி
வரும் மின்னலுக்கும்
இடையூறு கிடையாது!
கலைஞர்களின் கலைக்கும் - அவர்களது
கற்பனைக் குதிரைக்கும்
கடிவாளம் கிடையாது!
பூக்களின் வாசனைக்கும் - அதை
வட்டமிடும் வண்டுகளுக்கும்
வன்முறை கிடையாது!
ஆழ்கடலின் அமைதிக்கும் - மனிதனின்
ஆழ்மனது துய்மைக்கும்
எல்லைகள் கிடையாது!
விண்மீன்கள் விற்பநிக்கும் - வான்
வெண்ணிலவை வாங்கிடவும்
கடைகள் கிடையாது!
முத்து குளிப்பதற்கும் - முன்னேற
முயற்சி எடுப்பதற்கும்
முடிவுரை கிடையாது!
நண்பனின் நட்பிற்கும் - மக்கள்
நலம் விரும்பிகளின் அன்பிற்கும்
நிகரேதும் கிடையாது!
பாசமில்லா மனதிற்கும் - செம்மை
குருதியில்லா உடலுக்கும்
பலமேதும் கிடையாது!
தடமில்ல சாலைக்கும்-வாழ்வில்
குறிக்கோளற்ற மனிதனுக்கும்
முன்னேற்றம் கிடையாது!
இனித்திடும் தேனுக்கும் -நமது
இயற்கை அன்னைக்கும்
இணையேதும் கிடையாது!
அறிஞர்களின் அறிவிற்கும்-முத்தமிழ்
கவிஞர்களின் கவிதைக்கும்
தடையேதும் கிடையாது!
தீயவனை காப்பதற்கும்-சிதைந்த
கற்சிலை அமர்வதற்கும்
கருவறை கிடையாது!
சாதிக்கும் மாணவர்களுக்கும்- நல்வழி
போதிக்கும் ஆசிரியர்களுக்கும்
பேதைமை கிடையாது!
இயற்கையின் படைப்பிற்கும் -ஈடு
செய்திட எதுவுமே கிடையாது!
பாரினில்,
பரிதவிக்க பதறவைக்கும்
காற்றிற்கு வேலி கிடையாது!
ஆனால்
வேகத்தை விவேகமாக்கி- அதை
அளவிட முடியா ஆற்றலாய்
ஆக்கிவிட முடியும்!
இருந்தும்
காற்றற்று மனதிற்கு
கரை போடாமல் போனால் - அது
களர் நிலமாய்
களம் கண்டு விடும்!
எனவே
மனதினை மென்மையாக்கு -அதை
கொண்டு வாழ்வினை
செம்மையாக்கு!
அன்பு என்னும் விதைவித்து
அறிவினை விருட்சமாக்கு!
தவழ்ந்து வரும் -தென்றலை
தாலாட்டு!
தாவி வரும் -சூறாவளிக்கு
தடைப்போட்டு!
நீ என்றென்றும் - வெற்றி
நடைப்போட்டு!
உலகை உன் வசமாக்கு!"
-பா.நதி @ நரேந்திரன்
அன்னையின் பாசத்திற்கும்
அளவு கிடையாது!
இடிக்கின்ற இடிக்கும்-இறங்கி
வரும் மின்னலுக்கும்
இடையூறு கிடையாது!
கலைஞர்களின் கலைக்கும் - அவர்களது
கற்பனைக் குதிரைக்கும்
கடிவாளம் கிடையாது!
பூக்களின் வாசனைக்கும் - அதை
வட்டமிடும் வண்டுகளுக்கும்
வன்முறை கிடையாது!
ஆழ்கடலின் அமைதிக்கும் - மனிதனின்
ஆழ்மனது துய்மைக்கும்
எல்லைகள் கிடையாது!
விண்மீன்கள் விற்பநிக்கும் - வான்
வெண்ணிலவை வாங்கிடவும்
கடைகள் கிடையாது!
முத்து குளிப்பதற்கும் - முன்னேற
முயற்சி எடுப்பதற்கும்
முடிவுரை கிடையாது!
நண்பனின் நட்பிற்கும் - மக்கள்
நலம் விரும்பிகளின் அன்பிற்கும்
நிகரேதும் கிடையாது!
பாசமில்லா மனதிற்கும் - செம்மை
குருதியில்லா உடலுக்கும்
பலமேதும் கிடையாது!
தடமில்ல சாலைக்கும்-வாழ்வில்
குறிக்கோளற்ற மனிதனுக்கும்
முன்னேற்றம் கிடையாது!
இனித்திடும் தேனுக்கும் -நமது
இயற்கை அன்னைக்கும்
இணையேதும் கிடையாது!
அறிஞர்களின் அறிவிற்கும்-முத்தமிழ்
கவிஞர்களின் கவிதைக்கும்
தடையேதும் கிடையாது!
தீயவனை காப்பதற்கும்-சிதைந்த
கற்சிலை அமர்வதற்கும்
கருவறை கிடையாது!
சாதிக்கும் மாணவர்களுக்கும்- நல்வழி
போதிக்கும் ஆசிரியர்களுக்கும்
பேதைமை கிடையாது!
இயற்கையின் படைப்பிற்கும் -ஈடு
செய்திட எதுவுமே கிடையாது!
பாரினில்,
பரிதவிக்க பதறவைக்கும்
காற்றிற்கு வேலி கிடையாது!
ஆனால்
வேகத்தை விவேகமாக்கி- அதை
அளவிட முடியா ஆற்றலாய்
ஆக்கிவிட முடியும்!
இருந்தும்
காற்றற்று மனதிற்கு
கரை போடாமல் போனால் - அது
களர் நிலமாய்
களம் கண்டு விடும்!
எனவே
மனதினை மென்மையாக்கு -அதை
கொண்டு வாழ்வினை
செம்மையாக்கு!
அன்பு என்னும் விதைவித்து
அறிவினை விருட்சமாக்கு!
தவழ்ந்து வரும் -தென்றலை
தாலாட்டு!
தாவி வரும் -சூறாவளிக்கு
தடைப்போட்டு!
நீ என்றென்றும் - வெற்றி
நடைப்போட்டு!
உலகை உன் வசமாக்கு!"
-பா.நதி @ நரேந்திரன்
No comments:
Post a Comment